கதிரிப்பாய் நலன்புரி சங்கம்
லண்டன்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் குடும்பத் தலைவனை இழந்த கதிரிப்பாய் மக்களுக்கு உதவும் நோக்குடன் லண்டனில் உள்ள எமது நல்ல உள்ளங்களால் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி சங்கமானது பல குடும்பங்களுக்கு நிதி உதவி செய்து வருகிறது. இதை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் கடந்த 21-02-2015 அன்று லண்டனில் உள்ள அஜந்தனின் இல்லத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் கதிரிப்பாய் நலன்புரி சங்கத்தின் சேவையை மேலும் விஸ்தரிக்குமுகமாக ஏனய ஐரோப்பிய நாடுகளான சுவிஸ், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், நோர்வே, டென்மார்க், இத்தாலி போன்ற நாடுகளில் உள்ள எமது உறவுகளையும் இணைத்துக்கொள்ள முடிவு செயப்பட்டுள்ளது. எனவே மேற்படி நாடுகளில் உள்ள நல்ல உள்ளங்கள் அனைவரும் இதில் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்கப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு
ஸ்ரீரங்கம் (தலைவர் ) - 07791724366
ஆனந்த் (செயலாளர் ) - 07983805919
அஜந்தன் (பொருளாளர் ) 07961906345